ரமலானே வருக ………
இறைவா …..இந்த ஆண்டு …..
கொரோனா இல்லாத ரமலான் வேண்டும்.
ஊரடங்கு நீக்கப்பட்ட ரமலான் வேண்டும் ..
பள்ளிக்கு சென்று அமல்களை நிறைவேற்றிடல் வேண்டும் ..
அல்லாஹ்வின் இல்லத்தில் அனுதினமும் பயான்கள் ஒலித்திடல் வேண்டும் .
திருமறையை நிறைவாக ஓதிடல் வேண்டும்.
பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி மணத்திடல் வேண்டும் .
இப்தார் விருந்துகள் ஆங்கங்கே நடந்திடல் வேண்டும்
யாவர்க்கும் பொருளாதாரத்தில் மேம்பாடு
வேண்டும் .
நிறைவாக சக்காத்து பித்ரா கொடுத்திடல் வேண்டும் .
பிரிந்து கிடக்கும் உறவுகள் ஒன்றிணைந்துதிடல் வேண்டும் .
கணவன் மனைவிக்கு ஆடை , மனைவி கணவனுக்கு ஆடை என்ற இறைவனின் சொல் இயல்பில் வந்திடல் வேண்டும்.
மதுக்கூர் புதுப்பள்ளி வேலைகள் முழுவீச்சில் நடந்திடல் வேண்டும்..
நிதி உதவி அள்ளித்தந்து மக்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிடல் வேண்டும்..
குழப்பவாதிகளுக்கும் அல்லாஹ் நற்புத்தி வழங்கிடல் வேண்டும் .
அடுத்த ரமலானுக்குள் புதிய பள்ளியில் தொழுதிடும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் இறைவா நீ தந்திடல் வேண்டும் ….
ஆமீன்… ஆமீன்… யா ரப்பில் ஆலமீன் ..
KNM.முகம்மது இஸ்மாயில்.
மதுக்கூர் .
08.04.21